விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
கொரோனா நிவாரண நிதியாக நடிகர் அஜித் குமார் ரூ.25 லட்சம் வழங்கி உள்ளார். முன்னதாக அவர் ரூ.2.5 கோடி வழங்கியதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி உள்ள நிலையில் தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணிக்காக அரசுக்கு தாராளமாக நிதி வழங்கலாம் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து திரையுலகில் சார்பில் முதல் ஆளாக நடிகர் சிவகுமார் குடும்பம் சார்பில் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.1 கோடி நிதியை முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக சென்று வழங்கினர். தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.25 லட்சம் நிதி வழங்கினார்.
இந்நிலையில் நடிகர் அஜித் குமார் தன் பங்கிற்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கி உள்ளார். இதை அவர் வங்கி பரிவர்த்தனை மூலம் வழங்கி உள்ளார்.
அஜித் வழங்கிய நிதியில் குழப்பம்
முன்னதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் அஜித் ரூ.2.5 கோடி நிதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, வங்கி பரிவர்த்தனை மூலம் அஜித் ரூ..25 லட்சம் கொரோனா நிதி வழங்கியாக தெரிவித்தார். இதனால் அஜித் வழங்கிய நிதி தொடர்பாக சற்று குழப்பம் நிலவியது. பின்னர் அரசு சார்பிலும் திருத்தப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அவர் ரூ.25 லட்சம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.