திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
இந்திப்பட சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த நடிகர் தனுஷ் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். சில வாரங்களுக்கு முன் இந்தி படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு தனுஷ் காயம் அடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தோள்பட்டை மற்றும் முதுகு தண்டில் காயம் ஏற்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு, வீட்டில் ஓரிரு நாட்கள் தங்கி ஓய்வு எடுத்தார். தற்போது உடல் நிலை பூரண குணமாகியுள்ளது. இதையடுத்து மரியான் படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். பரத்பாலா இயக்கும் இப்படத்தின் சூட்டிங் தற்போது நாகர்கோவிலில் நடந்து வருகிறது. இதில் நடிகர் தனுஷ் பங்கேற்று நடித்து வருகிறார். இதுகுறித்து தனுஷ் அளித்துள்ள பேட்டியில், முதுகு தண்டு காயம் குணமான பிறகு மீண்டும் மரியான் படத்தில் நடிக்க வந்துள்ளேன். நாகர்கோவில் கடற்கரை பகுதிகளில் நடக்கும் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன், என்று கூறியுள்ளார்.