'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா(70) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமான பேச்சு வழக்கு உள்ளது. அந்தவகையில் நெல்லை தமிழில் பேசி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் நெல்லை சிவா. இவரது இயர் பெயர் சிவநாதன் சண்முகவேல் ராமமூர்த்தி. 1952ம் ஆண்டு ஜன., 16ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள பணகுடியில் சிறுகிராமத்தில் பிறந்த இவர், சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்பு தேடினார். ஆரம்பத்தில் நாடகங்களிலும், டிவிக்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.
சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பணகுடியில் வசித்து வந்த நெல்லை சிவா இன்று(மே 11) மாலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரது இறுதிசடங்கு நாளை நண்பகலில் அவரது சொந்த ஊரிலேயே நடக்கிறது. நெல்லை சிவா திருமணமே செய்யாதவர் ஆவார்.
நடிகர்கள் விவேக், பாண்டு என அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் மறைந்து வருவது திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.