பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சட்டம் ஒரு இருட்டறை படத்தின் வெற்றிக்குப்பின்னர் தொடர்ந்து படங்களை இயக்குவேன், என்று டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் பேத்தி சினேகா பிரிட்டோ கூறினார். எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில், விஜயகாந்த் நடித்து 30 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் சட்டம் ஒரு இருட்டறை. இந்த படம், அதே பெயரில் மீண்டும் தயாராகியிருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகரனின் பேத்தி சினேகா பிரிட்டோ இயக்கியுள்ளார். அவருடைய தாயார் விமலாராணி தயாரித்து இருக்கிறார். தமன், ரீமாசென், பிந்து மாதவி, பியா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் பற்றிய அறிமுக நிகழ்ச்சியில் நடந்தது.
அப்போது டைரக்டர் சினேகா பிரிட்டோ பேசுகையில், சினிமா இயக்குவது சுலபம் அல்ல. எவ்வளவு பொறுப்புகள் மிகுந்தது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். ரீமாசென் சம்பந்தப்பட்ட சேசிங் காட்சியை படமாக்க மிகவும் சிரமப்பட்டேன். எங்க தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகரன் உதவியுடன் படமாக்கி முடித்தேன். படத்தில் தாத்தா, போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். இந்த படத்தின் வெற்றிக்குப் பின்னர் தொடர்ந்து படங்களை இயக்க திட்டமிட்டுள்ளேன், என்றார்.