தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் அவருடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, சூரி உள்பட பலர் நடிக்க டி.இமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட பட நிறுவனம் அறிவித்து விட்டதால் கொரோனா இரண்டாவது அலையையும் பொருட்படுத்தாமல் ஐதராபாத்தில் முகாமிட்டு பலத்த கட்டுப்பாடுகளுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. கொரோனா இரண்டாவது அலை உருவானபோது அண்ணாத்த செட்டில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது போன்று இந்தமுறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு தளத்திற்குள் பலத்த பாதுகாப்பும், கட்டுப்பாடுகளும் போடப்பட்டுள்ளது. வெளிநபர்கள் யாருமே உள்ளே செல்ல அனுமதி கிடையாது. அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
இப்படியான நிலையில் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடிக்கும் தருவாயில் இருக்கும் ரஜினி, விரைவில் சென்னை திரும்பயிருப்பதாக கூறுகிறார்கள். அப்படி சென்னை வரும் ரஜினி, வந்த வேகத்தில் தனக்கான டப்பிங் வேலைகளில் ஈடுபடப்போவதாகவும் தற்போது ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. இப்படி ரஜினி வேகம் காட்டி வருவதால், தீபாவளிக்கு திட்டமிட்டபடி அண்ணாத்த திரைக்கு வந்து விடும் என்கிறார்கள்.