ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் திரையுலகில் முப்பெரும் நாயகர்களாக கருதப்படும் அஜித், விஜய், சூர்யா ஆகியோரின் மனைவிகளான ஷாலினி, சங்கீதா, ஜோதிகா ஆகியோர் திருமண விழா ஒன்றில் பங்கேற்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பிரமாண்ட படங்களுக்கு பெயர் போன ஏ.எம்.ரத்னத்தின் மூத்த மகன் ஜோதி கிருஷ்ணா. சினிமா இயக்குனரான இவருக்கும், ஐஸ்வர்யாவுக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் திரையுலகின் பல முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்று புதுமண ஜோடிகளை வாழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ரஜினியின் வருகையை விட இன்னொரு விஷயம்தான் ஹைலைட்டாக அனைவராலும் பேசப்பட்டது. தமிழ் திரையுலகின் முப்பெரும் நாயகர்கள் குடும்பத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நாயகர்களின் மனைவிமார்கள் ஓரிடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டனர். விஜய்யின் மனைவி சங்கீதா, அஜித் மனைவி ஷாலினி, சூர்யா மனைவி ஜோதிகா ஆகியோர் ஒருபுறம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, மூன்று நாயகர்களும் தங்களது அடுத்த படங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.