டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. முன்னணி நடிகர், நடிகைகளுக்கும் இந்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பாலிவுட் நடிகர், நடிகைகள் அதிக அளவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் தீபிகா படுகோனா கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு எதிலும் கலந்து கொள்ளாமல் தனது சொந்த ஊரான பெங்களூருவில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபிகா படுகோனேவின் தந்தை பிரகாஷ், தாய் உஜ்ஜால, தங்கை அனிஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசிப்பதால் தீபிகாவைவும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து பரிசோதனை செய்து கொண்ட தீபிகாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.