'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக இருக்கிறது. தியேட்டர்களை கடந்த மாதத்திலிருந்தே மூடிவிட்டனர். இந்நிலையில் கடந்த மாதக் கடைசியிலும் இந்த மாதத்திலும் வெளியாக இருந்த படங்களின் நிலைமை தற்போது கேள்விக்குறி ஆகி உள்ளது. இதனால் பல படங்கள் மீண்டும் ஓடிடி நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளன.
விஜய் சேதுபதி நடித்துள்ள 'துக்ளக் தர்பார்', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' ஆகிய படங்களையும் ஓடிடி தளங்களில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். ஆனாலும், அவற்றை அப்படி வெளியிடுவதில் சிக்கல் நீடித்து வருகிறதாம். இப்படங்களுக்கான சாட்டிலைட் உரிமைகளை விற்கும் போது, தியேட்டரில் வெளியிட்ட பிறகு படத்தை டிவியில் ஒளிபரப்பு செய்வதற்காகத்தான் ஒப்பந்தம் போட்டுள்ளார்களாம்.
தற்போது ஓடிடி வெளியீடு என்பதால் அந்த ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமாம். அதனால் தான் இந்தப் படங்களுக்கான ஓடிடி பற்றிய தகவல்கள் வந்தும் அவைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்தப் பெரிய படங்களைப் போலவே மேலும் சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்கிறார்கள். ஆனால் அவையும் இதுபோன்று சிக்கலில் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மீண்டும் ஒப்பந்தங்களை மாற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
இப்போதைய சூழ்நிலையில் தியேட்டர்களைத் திறக்க இன்னும் இரண்டு, மூன்று மாத காலம் ஆகும் என்கிறார்கள். அதனால், அதற்குள்ளாக பத்து, பதினைந்திற்கும் மேற்பட்ட படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிவிடும் என்று கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.