ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சொந்த முயற்சியில் என் மகன் விஜய் முன்னேறினார் என்று விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பெருமிதத்துடன் கூறினார். எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்றது. தற்போது எஸ்.ஏ.சந்திரசேகரின் தங்கையின் பேத்தியான சென்னை லயோலா கல்லூரி மாணவி சினேகா பிரிட்டோ இயக்கத்தில் மீண்டும் அதே பெயரில் ஒரு புதிய தமிழ்ப்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார்.
இப்பட சம்பந்தப்பட்ட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசுகையில், என் மகன் விஜய்யை ஒரு டாக்டராக்க விரும்பினேன். ஆனால் அவர் நடிகராக நினைத்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாளைய தீர்ப்பு உள்பட 5 படங்களில் அவரை நாயகனாக நடிக்க வைத்தேன். அதன்பிறகு நடிப்புத்துறையை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு அவரது சொந்த முயற்சியில் முன்னேறி இன்று இளைய தளபதியாக உருவாகி உள்ளார். பெற்றோர்கள் என்பவர்கள் வழிகாட்டிகள்தான். அதேபோல் மாணவர்களான நீங்கள் எந்த இடத்திற்கு வரவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பு நிச்சயம் உங்கள் கனவை நனவாக்கும், என்றார்.