தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தங்கர்பச்சானின் அம்மாவின் கைபேசி படம் தனக்கு புதிய படங்களுக்கு வித்திடும் என்று எதிர்பார்த்தார் இனியா. ஆனால் அந்த படத்தில் நடித்ததால் அவருக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த நல்ல பெயரும் போய் விட்டது. இதனால் வாகை சூடவாவில் நடித்தபோது அவரை பாராட்டிய சினிமாக்காரர்களே இப்போது, இந்த மாதிரி படங்களில் நடித்து ஏன் பெயரை கெடுத்துக்கொள்கிறாய் என்று பீல் பண்ணுகிறார்களாம். அதனால் இந்த படத்துக்குப்பிறகு கோலிவுட் தன்னை தத்தெடுத்துக்கொள்ளும் என்று கனவு கண்டு கொண்டிருந்த இனியா இப்போது அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் இடிந்து போயிருக்கிறார்.
இந்த நேரத்தில் அவரது அபிமானிகள் சிலர், இப்படி உப்பு சப்பில்லாத வேடங்களில் நடிப்பதை விட்டுவிட்டு, சர்ச்சைக்குரிய படங்களிலும் நடித்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்று அவருக்கு அறிவுறுத்தி வந்தனர். இதனால் அடக்க ஒடுக்கமான நடிகையாக சினிமாவில் இடம்பிடிக்க நினைத்த இனியா, இப்போது கட்டவிழ்த்து விட தயாராகி விட்டார். அதிரடியான சர்ச்சைக்குரிய கதைகளிலும் நடிப்பேன். தேவைப்பட்டால் கூடுதல் கவர்ச்சி சேவை ஆற்றவும் நான் தயார் என்று சில கமர்சியல் படாதிபதிகளிடம் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். இனியாவின் கால்சீட் டைரி இனியாவது புல்லாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.