ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
நடிப்பதற்கு கையில் படம் இல்லை என்றாலும் மீடியாக்களின் கவனத்தை திருப்ப அடிக்கடி எதையாவது செய்கிறவர் நடிகர் மன்சூரலிகான். சில நேரங்களில் அது அவருக்கு ஆபத்தாக முடியும்.
அப்படித்தான் நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது மருத்துவமனை வாசலில் நின்று கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், தடுப்பூசியையும் விவேக்கின் உடல் நலனையும் ஒப்பிட்டும், கொரோனா இந்தியாவிலேயே இல்லை, அரசு ஏமாற்றுகிறது என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அளித்த புகாரின் பேரில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், தூண்டிவிடுதல், தொற்றுப்பரவல் தடைச் சட்டத்தை மீறுதல், சமூக வலைதளங்கள், காட்சி ஊடகங்கள் மூலம் அவதூறு பரப்புதல், பொதுமக்களைத் தூண்டிவிடுதல், தொற்றுநோய் தடுப்புச் சட்டம்,பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் வழக்கு பதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மன்சூரலிகான் கைது செய்யப்படுவார் என்றும், ஜாமீனில் வெளிவர முடியாது என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையில் முன்ஜாமீன் கேட்டு மன்சூரலிகான் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.