ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த வாரத்தில் வெளியான பவன் கல்யாணின் வக்கீல் சாப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த அஞ்சலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. முக்கியமாக அந்த படத்தை தயாரித்த தில்ராஜூவை தனது நடிப்பினால் வெகுவாக கவர்ந்து விட்டாராம் அஞ்சலி. அதன் காரணமாக தற்போது அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், வருண்தேஜ் நடிப்பில் தான் தயாரித்து வரும் எப்-3 என்ற படத்திற்கு அஞ்சலியை ஒப்பந்தம் செய்திருக்கிறார் தில்ராஜூ. இதே படத்தில் தமன்னா, மெஹ்ரீன் போன்ற நடிகைகள் நடித்து வரும் நிலையில், அஞ்சலியும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த வாரம் மைசூரில் நடக்கும் எப்-3 படப்பிடிப்பில் அவரும் கலந்து கொள்கிறார்.