ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலா இயக்கத்தில் திரைக்கு வரத்தயாராகி வரும் படம் பரதேசி. இந்த படத்துக்காக அதர்வா, வேதிகா, தன்சிகா அடங்கிய குழு சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக காடு மலைப்பகுதிகளில் முகாமிட்டு நடித்துக்கொடுத்து விட்டு திரும்பியுள்ளனர். ஆக இப்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகளை முடித்துக்கொண்டிருக்கிறார் பாலா. இதையடுத்து படத்தின் ஆடியோ விழாவை நடத்தவும் தயாராகி விட்டார்.
ஆனால் அப்படி விழாவுக்கு தயாராகி வருபவர், படத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ஒளிப்பதிவாளரின் பெயரை ஆடியோ அழைப்பிதழில் போடாமல் விட்டு விட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த ஒளிப்பதிவாளர் செழியன், பரதேசிக்காக நான் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. நீங்கள்கூட இந்த மாதிரி காட்சி வர வேண்டும் என்று சொல்லிவிட்டு சேரில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டீர்கள். ஆனால் நானல்லவா, கல்லிலும் முள்ளிலும் நுழைந்து படமாக்கினேன். அதற்காக நான் பட்ட காயங்கள் எவ்வளவோ இருக்கிறது. அப்படிப்பட்ட என்னை கடைசி நேரததில் மறப்பது நியாயமா? என்று பாலாவிடம் ஆத்திரத்தில் வார்த்தைகளை அடுக்கடுக்காக கொட்டியிருக்கிறார். அதன்பிறகுதான் சாரி, எப்படியோ மறந்துட்டேன். பேரை சேர்த்துட்டா போச்சு என்று சொன்னாராம்.
என்றாலும், படப்பிடிப்பில் பட்ட காயங்களை விட, இவர் என் பேரை மறந்தது, மனசுக்குள்ள ரொம்ப பெரிய காயமாயிடுச்சுங்க -என்று சொல்லி புலம்புத்தள்ளி வருகிறார் ஒளிப்பதிவாளர்.