நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
தற்போது மணிரத்னம் இயக்கும் கடல் மற்றும் சீனுராமசாமி இயக்கும் நீர்ப்பறவை ஆகிய இரண்டு படங்களுமே கடல்சார்ந்த மக்களின் வாழ்வியல் பிரச்னையை மையமாக வைத்து உருவாகியுள்ளன. ஆனால் மணிரத்னத்தின் மேக்கிங் ஸ்டைல் என்பது வேறு மாதிரியாக இருக்கும் என்பதால், என்னதான் இரண்டு கதையிலும் ஒரே மாதிரியான நெடி அடித்தாலும், கதையோட்டம், காட்சி அமைப்புகள் கண்டிப்பாக வெவ்வேறாகத்தான் இருக்கும் என்பதை இரண்டுதரப்பினருமே யூகித்துக்கொண்டார்கள்.
ஆனால் பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மரியான் படமும் இதேபோன்று கடல்சார்ந்த மக்களின் பிரச்னையை மையமாக வைத்துதான் உருவாகி வருகிறது. அதனால் கடல், நீர்ப்பறவை படங்களில் சாயல் இருந்தால் அதை நீக்கி விட்டு புதுமையான காட்சிகளை புகுத்திவிட வேண்டும் என்று மேற்படி படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்கள். அதன்காரணமாகத்தான், மரியான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட தனுஷ், இப்போது ராஞ்சனா இந்தி படத்தை முதலில் முடித்துக்கொடுத்து விட்டு பின்னர் தமிழுக்கு வரலாம் என்று மும்பையில் முகாமிட்டுள்ளார்.