டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தற்போது மணிரத்னம் இயக்கும் கடல் மற்றும் சீனுராமசாமி இயக்கும் நீர்ப்பறவை ஆகிய இரண்டு படங்களுமே கடல்சார்ந்த மக்களின் வாழ்வியல் பிரச்னையை மையமாக வைத்து உருவாகியுள்ளன. ஆனால் மணிரத்னத்தின் மேக்கிங் ஸ்டைல் என்பது வேறு மாதிரியாக இருக்கும் என்பதால், என்னதான் இரண்டு கதையிலும் ஒரே மாதிரியான நெடி அடித்தாலும், கதையோட்டம், காட்சி அமைப்புகள் கண்டிப்பாக வெவ்வேறாகத்தான் இருக்கும் என்பதை இரண்டுதரப்பினருமே யூகித்துக்கொண்டார்கள்.
ஆனால் பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மரியான் படமும் இதேபோன்று கடல்சார்ந்த மக்களின் பிரச்னையை மையமாக வைத்துதான் உருவாகி வருகிறது. அதனால் கடல், நீர்ப்பறவை படங்களில் சாயல் இருந்தால் அதை நீக்கி விட்டு புதுமையான காட்சிகளை புகுத்திவிட வேண்டும் என்று மேற்படி படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்கள். அதன்காரணமாகத்தான், மரியான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட தனுஷ், இப்போது ராஞ்சனா இந்தி படத்தை முதலில் முடித்துக்கொடுத்து விட்டு பின்னர் தமிழுக்கு வரலாம் என்று மும்பையில் முகாமிட்டுள்ளார்.