டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து எங்கேயும் எப்போதும் தமிழ் படத்தை தயாரித்த பிரபல ஹாலிவுட் நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ, இனி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 6 அல்லது எட்டு இந்தி படங்களையும், 3 தமிழ் படங்களையும் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது என்பதை அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி விஜய் சிங் கோவா திரைப்பட விழாவில் தெரிவித்தார். டைட்டானிக் 3டி, ராஸ் 3, போல்பச்சன் போன்ற படங்கள் இவர்கள் தயாரித்து வெளியிட்டு இந்த ஆண்டின் வெற்றி படங்களாக அவை அமைந்தன. ஆங்கலீயின் லைப் ஆப் பை இந்தவாரம் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் 2010-ல் தயாரித்த ஆக்ஷ்ன் காமெடி படமான நைட் அண்ட் டே படத்தை ரித்திக் ரோஷன் இந்தியில் தயாரிக்க இருக்கிறார்.
கோவாவிலிருந்து -எஸ்.ரஜத்-