தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து எங்கேயும் எப்போதும் தமிழ் படத்தை தயாரித்த பிரபல ஹாலிவுட் நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ, இனி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 6 அல்லது எட்டு இந்தி படங்களையும், 3 தமிழ் படங்களையும் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது என்பதை அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி விஜய் சிங் கோவா திரைப்பட விழாவில் தெரிவித்தார். டைட்டானிக் 3டி, ராஸ் 3, போல்பச்சன் போன்ற படங்கள் இவர்கள் தயாரித்து வெளியிட்டு இந்த ஆண்டின் வெற்றி படங்களாக அவை அமைந்தன. ஆங்கலீயின் லைப் ஆப் பை இந்தவாரம் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் 2010-ல் தயாரித்த ஆக்ஷ்ன் காமெடி படமான நைட் அண்ட் டே படத்தை ரித்திக் ரோஷன் இந்தியில் தயாரிக்க இருக்கிறார்.
கோவாவிலிருந்து -எஸ்.ரஜத்-