துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து எங்கேயும் எப்போதும் தமிழ் படத்தை தயாரித்த பிரபல ஹாலிவுட் நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ, இனி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 6 அல்லது எட்டு இந்தி படங்களையும், 3 தமிழ் படங்களையும் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது என்பதை அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி விஜய் சிங் கோவா திரைப்பட விழாவில் தெரிவித்தார். டைட்டானிக் 3டி, ராஸ் 3, போல்பச்சன் போன்ற படங்கள் இவர்கள் தயாரித்து வெளியிட்டு இந்த ஆண்டின் வெற்றி படங்களாக அவை அமைந்தன. ஆங்கலீயின் லைப் ஆப் பை இந்தவாரம் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் 2010-ல் தயாரித்த ஆக்ஷ்ன் காமெடி படமான நைட் அண்ட் டே படத்தை ரித்திக் ரோஷன் இந்தியில் தயாரிக்க இருக்கிறார்.
கோவாவிலிருந்து -எஸ்.ரஜத்-