மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
புதுமுக இயக்குனர் இப்ராகிம் இயக்கத்தில், புதுமுங்கள் நடித்த பூர்வகுடி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பிரபலங்கள் மற்றும் இயக்குனர்கள் எழுத்தாளர்கள் கலந்து கொண்டு பேசினர். விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன் பேசும்போது, மிக இயல்பாக தன் கருத்துக்களை பதிவு செய்தார். அப்போது இந்த படத்தில் இலக்கிய உலகில் நீண்ட காலமாக இருந்து வரும் தமிழ்மணவாளன் வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார், இது வரவேற்கதக்கது. இது இயக்குனர்களின் காலம், இலக்கிய வழி வந்தவர்கள் இலக்கிய தீபத்தை ஏந்திக்கொண்டு சினிமாவுக்குள் வருகின்றனர். இது ஆரோக்கியமான விஷயம். இலக்கிய வாதிகள் சினிமாவுக்குள் வந்தால் சினிமா இன்னும் செழிக்கும். மலையாள சினிமாவில் கதைகள் இன்றும் பேசப்படுவது ஏன் என்றால் எம்.டி.வாசுதேவநாயன் அவர்கள் உள்ளே வந்தார். வங்கதேச கதைகள் பேசப்படுகிறது என்றால் எழுத்தாளர்கள் அதிகம் உள்ளே வந்தனர். சத்யஜித்ரே வால் சிறந்த கதைகள் எப்படி கொடுக்க முடிந்தது என்றால் பக்கத்தில் எழுத்தாளர்கள் பலரும் இருந்தனர். விபூதி பூஷன் என்ற எழுத்தாளர் எழுதிய நாவலை வைத்து மூன்று வெற்றி படங்களை கொடுத்தார். அதில் ஒன்று தான் பதேர் பாஞ்சாலி. சிறந்த படங்கள் எப்போதும் இலக்கியம் பேசப்பட்டவையாக பாராட்டப்பட்டவையாக இருக்கும். எனவே இலக்கியவாதிகள் பலரும் சினிமாவுக்குள் வரவேண்டும் அப்படி வந்தால் சினிமா
இன்னும் இன்னும் செழிக்கும் என்றார் பிரபஞ்சன்.