சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
விஜய் நடித்து தற்போது ஓடிக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தில் பலரும் பாராட்டிக் கொண்டிருக்கும் அம்சங்களில் ஒன்று அதன் ஒளிப்பதிவு. அதைச் செய்திருப்பவர் சந்தோஷ் சிவன். தற்போது அக்ஷய்குமார் நடிப்பில் இந்தியில் துப்பாக்கியை இயக்கும் முயற்சியில் இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்திப் படத்துக்கும் சந்தோஷ் சிவனே ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அதற்கு சந்தோஷ் சிவன் மறுத்துவிட்டார். அக்ஷய்குமார் கேட்டும் முடியாது என்று சொல்லிவிட்டார். இதுகுறித்து சந்தோஷ் சிவன் கூறியதாவது: "கமர்ஷியல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்வது புதிதல்ல. தளபதி படத்துக்கே ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். துப்பாக்கியில் சொல்லப்படும் மெசேஜ் பிடித்திருந்ததால் பணியாற்றினேன். ஒரே வேலையை திரும்ப செய்வது மாதிரி போரடிக்கிற விஷயம் எதுவும் கிடையாது. அதனால் துப்பாக்கியின் இந்தி ரீமேக்கில் பணியாற்றவில்லை. 2013ம் ஆண்டு ஒளிப்பதிவிலிருந்து விலகி இருக்கப்போகிறேன். இந்த வருடம் முழுவதும் ஒரு ஸ்கிரிப்பட் தயார் செய்து 2014ல் பிரமாண்ட படம் ஒன்றை இயக்கப்போகிறேன்" என்றார்.