‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ் சினிமாவில் கமல், ரஜினி இருவருக்கும் இடையில் இருந்து கொண்டு அவர்களுக்கு நிகரான வெற்றியையும், வசூலையும் கொடுத்தவர் ராமராஜன். இன்று வரை நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்கிற உறுதியோடு இருக்கிறார்.
சினிமா, அரசியல் என ஒரு ரவுண்ட் வந்துவிட்ட அவர் வாழ்வில் நிறைய ஏற்ற, இறக்கங்களை பார்த்துவிட்டார். சமீபத்தில் அவரை கொரோனா தாக்கியது. அதன் கொடூர பிடியில் இருந்தும் தப்பி வந்து விட்டார். இப்போது அவர் ஒரு புதிய படத்தை டைரக்டு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இதற்காக திரைக்கதை எழுதும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ராமஜான் மீண்டும் இயக்குனராக களம் இறங்குகிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: ‛‛நான் ஹீரோவாக 44 படங்களில் நடித்து இருக்கிறேன். 5 படங்களை இயக்கி இருக்கிறேன். 49 படங்களும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதையம்சம் கொண்டதாகவே இருந்தன. நான் இயக்க இருக்கும் புதிய படமும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதையம்சம் கொண்டதாகவே இருக்கும். சினிமாவில் பெண்களை மதித்தவன். அதுபோல் அரசியலில் நான் கடைசி வரை ஜெயலலிதா அம்மாவின் தொண்டனாகவே இருப்பேன். தற்போது நான் தயார் செய்து கொண்டிருக்கும் கதை விஜய்சேதுபதிக்கு பொருத்தமாக இருக்கும். மேலும் சில கதைகளும் என்னிடம் உள்ளன'' என்கிறார் ராமராஜன்.