ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆண்களை டிஷ்யூ பேப்பர் என்று கூறிய நடிகை சோனாவுக்கு பெண்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு சங்க தலைவரும் மனித உரிமை கழக சர்வதேச அமைப்பு மகளிர் அணி நிர்வாக செயலாளருமான கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகை சோனா வீட்டில் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. ஆண்கள் பற்றி அவதூறாக பேசவில்லை என்று சோனா மறுத்து விட்டார். வருத்தமும் தெரிவித்து விட்டார். அதன்பிறகும் அவருக்கு எதிராக போராடுவது முறையல்ல. அதுவும் ஒரு பெண்ணை கண்டித்து அவர் வீட்டில் இத்தனை ஆண்கள் குவிந்து கோஷம் போடுவது ஏற்ககூடியது அல்ல. சூர்யா படத்தில் பெண்களை நம்பி கெட்டுபோனவர் பலர் என்று பாடல் வந்துள்ளது. தனுஷ், சிம்பு படங்களிலும் பெண்களுக்கு எதிரான பாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதை நாங்கள் சினிமாவாக பார்க்கிறோம். எனவேதான் எதிர்த்து போராட்டங்களில் ஈடுபடவில்லை. சோனா இழிவாக பேசி இருப்பதாக கருதினால் கோர்ட்டுக்கு செல்லலாம். அதை விடுத்து ஒரு பெண் என்றும் பாராமல் கண்டன போராட்டங்கள் நடத்துவது அவரது வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆண்களுக்கு சங்கம் தேவையில்லை. பெண்கள்தான் சமூகத்தில் பல வகைகளில் பாதிக்கப்படுகின்றனர். சோனாவை மிரட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். போராட்டம் தொடருமானால் சோனாவுக்கு பெண்கள் இயக்கம் பாதுகாப்பு அளிக்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.