‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகர்கள் குரங்குகளைப் போல் மாறி வருகின்றனர் என்று பாலிவுட் நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார். மனதில் தோன்றுவதை சற்றும் யோசிக்காமல் பட்டென்று போட்டு உடைப்பவர்களில் கரீனா கபூரும் ஒருவர். அவ்வப்போது இப்படி பட்டென்று பேசி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், நடிகர்களின் விளம்பர யுத்தி குறித்து கூறியிருக்கிறார். அவர் தனது பேட்டியில், நடிகர்கள் தற்போது குரங்குகளைப் போல் மாறி வருகின்றனர். உயரமான கட்டிடங்களில் இருந்து தங்கள் படங்கள் பற்றி விளம்பரம் என்ற பெயரில் அலறுகின்றனர். தபாங் 2 படம் நன்றாக வந்துள்ளது. அதை விளம்பரம் செய்தாலும், செய்யாவிட்டாலும் மக்கள் நிச்சயம் பார்ப்பார்கள். பிரகாஷ் ஜாவின் சத்யாகிரஹா படத்தில் பத்திரிக்கையாளராக வருகிறேன். ஆனால் அதில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி கேட்கமாட்டேன். அமீர் கானுடன் நான் நடித்துள்ள தலாஷ் படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தை விளம்பரம் செய்யும் எண்ணம் இல்லை, என்று கூறியுள்ளார்.