மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தனது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு நடிகர் சிம்பு பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் எல்லா கதைகளிலும் நடிக்க விரும்புவதில்லை. கதைக்கு நான் எந்த அளவு தேவைப்படுகிறேன் என்று பார்ப்பேன். கேரக்டருக்கு நான் பொருந்துவேனா என்று யோசிப்பேன். இதற்கு சரியா இருந்தால் நடிப்பேன். அதேபோல நான் எப்போதுமே எனக்கு தோன்றுவதை எழுதி வைப்பேன். ரொம்ப நாட்களுக்கு முன்னால் லவ் பண்ணலாமா? வேண்டாமா? பாடலை எழுதி வைத்திருந்தேன். அந்த பாடல் போடா போடி படத்திற்கு பொருத்தமாக இருந்ததால் பயன்படுத்திக் கொண்டோம். என் வருங்கால மனைவிக்கு சினிமா பற்றி கொஞ்சம் தெரிந்து இருக்க வேண்டும். குழந்தை அழகாக பிறக்க வேண்டும் என்பதால் மனைவியும் அழகாக இருக்க வேண்டும். சாப்பாடு பொங்கி போடனும்; என் கூடவே வரணும் என்று இல்லை, என்று கூறியிருக்கிறார்.