தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நண்பன் படத்திற்கு பிறகு மீண்டும் தனது மார்க்கெட் புத்துயிர் பெற்று விட்டதாக உற்சாகத்தில் இருந்தார் ஸ்ரீகாந்த். அதற்கேற்றார் போல் அவரை வைத்து பாகன், எதிரி எண் 3 மற்றும் நம்பியார் போன்ற படங்களை தயாரிக்க இரண்டு கம்பெனிகள் முன்வந்தன. இதனால் இந்த படங்களை வைத்து மீண்டும் மார்க்கெட்டை பலப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார் ஸ்ரீகாந்த்.
ஆனால் என்ன செய்வது தோல்விதான் அவரை துரத்தி துரத்தி அடிக்கிறதே. பாகன் படம் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டபோதும் தோல்விப்படமாகி விட்டது. அதனால் இன்னும் கைவசம் இரண்டு படங்கள் உள்ளதே அந்த படங்களில் ஒன்று வெற்றி பெற்றாலும், தப்பித்துக்கொள்ளலாம் என்று கணக்குப்போட்டிருந்தார் ஸ்ரீகாந்த். ஆனால், பாகனின் தோல்வியைக்கண்டு அஞ்சிய பைனான்சியர், எதிரி எண் 3 படத்துக்கு தொடர்ந்து பைனான்ஸ் தர மறுத்து விட்டாராம். இதனால் அப்படக்குழுவினர் அலுவலகத்தைகூட காலி பண்ணி விட்டனர். 70 சதவிகிதம் படப்பிடிப்பு நடந்த நிலையில் அப்படம் நின்று கொண்டிருக்கிறது. இதை அடுத்து ஸ்ரீகாந்தை வைத்து நம்பியார் படத்தை தயாரிக்கயிருந்தவர்களும் படப்பிடிப்பை தொடங்குவதா? வேண்டாமா? என்று கையை பிசைந்து கொண்டு நிற்கின்றனர்.