டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிம்பு, பிரபுதேவா என சிலரது அன்புக்குரியவராக திகழ்ந்த நயன்தாரா, சமீபகாலமாக அவர்களிடம் எந்தவித கனெக்சனும் இல்லாமல் சுதந்திர பறவையாகி இருக்கிறார். இந்நிலையில், புதிதாக ஆர்யா என்ற ப்ளேபாய் நடிகர் நயன்தாராவின் அடுத்த அன்புக்குரியவராகியிருக்கிறார். எங்காவது நயன்தாராவுக்கு ஒரு சிறு பிரச்சினை என்றாலும் ஓடோடி வந்து குரல் கொடுக்கும் முதல் நபராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில், தான் நடிக்கும் ராஜா ராணி படத்தில் நயன்தாராவை தனக்கு ஜோடியாக்கியிருக்கும் ஆர்யா, அவரை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார். ஆனால் அவர் கண்ணில் மண்ணை தூவும் வகையில், சமீபததில் அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தபோது, கூட்ட நெரிசலை சாதகமாக்கிய ஒரு ரசிகர் நயன்தாரா உடம்பில் தொடக்கூடாத இடங்களில் கைவரிசை காட்டியிருக்கிறார். இதனால் அந்த அதிர்ச்சியில் அவர் அலறித் துடித்திருக்கிறார். இது ஆர்யாவின் காதில் விழ, கொந்தளித்து விட்டாராம். அதுவரை ஹீரோவாக இருந்த அவர் திடீரென்று வில்லனாகி அந்த ரசிகரை அடிக்க பாய்ந்திருக்கிறார். அதற்குள் மொத்த யூனிட்டும் சேர்ந்து அந்த நபரை கும்மியெடுத்துள்ளனர். இருப்பினும் அந்த சம்பவத்துக்குப்பிறகு அன்று முழுக்க ஸ்பாட்டில் அடங்காத கோபத்தில் இருந்தாராம் ஆர்யா.