டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
67வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று(மார்ச் 22) அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ் படமாக ‛அசுரன் படமும், அதில் நடித்த தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது. தனுஷிற்கு இது இரண்டாவது தேசிய விருதாகும். அதுவும் ஏற்கனவே தனக்கு ‛ஆடுகளம் படம் மூலம் தேசிய விருது பெற்று தந்த வெற்றிமாறன் மூலமே ‛அசுரன் படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. இதற்காக மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்து, ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் தனுஷ்.
அதில், ‛‛காலையில் எழுந்ததுமே அசுரன் படத்திற்காக தேசிய விருது கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்தேன். ஒரு தேசிய விருது பெறுவது என்பதே கனவு. ஆனால் இரண்டு விருதுகள் வென்றிருப்பது ஆசீர்வாதமே. இந்தளவுக்கு நான் வருவேன் என கற்பனை செய்து பார்க்கவில்லை. இந்த தருணத்தில் நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டி உள்ளது. முதலில் அம்மா, அப்பா, என் குருவான அண்ணன் மற்றும் இந்த சிவசாமியை கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி.