ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் நடித்த துப்பாக்கி தமிழ்நாட்டில் நவம்பர் 13 தீபாவளி அன்று வெளியானது. தீபாவளியை அதிகம் கொண்டாடாத கேரளாவில் 126 தியேட்டர்களில் துப்பாக்கி வெளியானது. தீபாவளி அன்று அதிகாலையில் தமிழர்கள் எண்ணை தேய்த்து குளித்துக் கொண்டிருக்கும்போது பெரும்பாலான மலையாளிகள் துப்பாக்கி படத்தை பார்த்து விட்டார்கள். கேரளாவில் முக்கிய நகரங்களில் தீபாளியன்று அதிகாலை 4 மணிக்கும், 5 மணிக்கும் துப்பாக்கி படம் திரையிடப்பட்டது. ஆக தமிழர்களை விட துப்பாக்கியை முதலில் பார்த்து ரசித்தது மலையாளிகள்தான். விஷயம் அதுவல்ல, துப்பாக்கி வெளியான முதல் இரண்டு நாட்களில் நடந்த 600 காட்சிகளில் விநியோகஸ்தர்களுக்கு துப்பாக்கி அள்ளிக் கொடுத்தது 2 கோடி ரூபாய். பத்து நாட்களுக்கு பிறகு வந்து தொகை 6 கோடி ரூபாய். இன்னும் 50 நாட்கள் வரை அனைத்து தியேட்டர்களிலும் ஓடும் என்கிறார்கள். அப்படியென்றால் துப்பாக்கி கேரளாவில் வசூலிக்கப்போகும் தொகை குறைந்த பட்சம் 15 கோடி என்கிறார்கள்.இதற்கு முந்தைய தமிழ்பட வசூல் சாதனையை துப்பாக்கி முறியடிக்கும் என்கிறார்கள்.
மம்முக்காவும், மாலேட்டனும் துப்பாக்கிய பார்த்துட்டாங்களா...