துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
வாலி, குஷி என்று வேகமாக முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் பின்னர் அவருக்கும் ஹீரோ வேசம் போடும் ஆசை ஏற்பட்டதால், சில படங்களில் நடித்தவர், சில காலத்தில் காணாமல் போனார். இருப்பினும் தற்போது இசை என்ற படத்தின் மூலம் மீண்டும் மீண்டு வந்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
ஆனால் இந்த ரவுண்டில் கண்டிப்பாக ஏதாவது பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே களத்தில் இறங்கியுள்ளார். அதன்காரணமாக, இரண்டு இசையமைப்பாளர்களுக்கிடையே வெடிக்கும் ஈகோ பிரச்னையை மையப்படுத்தி கதை பண்ணியிருக்கிறார். இதில் இளையராஜாவாக பிரகாஷ்ராஜூம், ஏ.ஆர்.ரகுமானாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறார்களாம். அவர்களுக்கிடையே நடக்கும் தொழில் போட்டியும் இதில் இடம்பெற்றுள்ளதாம். அதனால் இந்த படம் திரைக்கு வரும் நேரத்தில் மேற்படி இசையமைப்பாளர்களின் எதிர்ப்பும், சர்ச்சையும் உருவாகும் என்று தெரிகிறது.