Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆண்களால் ஆபத்து! சோனா போலீசில் புகார்

22 நவ, 2012 - 15:22 IST
எழுத்தின் அளவு:

"ஆண்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளதால், வீட்டில் முடங்கி கிடக்கிறேன்; எனக்கு பாதுகாப்பு தர வேண்டும் என, கவர்ச்சி நடிகை சோனா, சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். நாகர்கோவிலைச் சேர்ந்த சோனா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சினிமா படங்களில், கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வார பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், ஆண்களை பற்றி, அவர் தவறாக கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு, ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முற்றுகை : இந்த சங்கத்தை சேர்ந்தவர்கள், தேனாம்பேட்டையில் சோனா நடத்தி வரும், பர்னிச்சர் கடை முன், முற்றுகை போராட்டம் நடத்தினர். "ஆண்கள் மத்தியில், சோனா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவர் செல்லும் இடமெல்லாம் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துவோம் என, அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

சோனா மறுப்பு : இதற்கிடையில், "ஆண்கள் மனம் புண்படும் படிகருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. பேட்டி எடுத்த நிருபர் ,தவறாக சித்தரித்து எழுதிவிட்டார். அதற்காக, அந்த நிருபர்,மன்னிப்பும் கோரினார் என, சோனா தெரிவித்து வருகிறார். கோர்ட்டில் வழக்கும் தொடுத்துள்ளார். இந்தநிலையில், நேற்று மாலை, போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்திருந்த சோனா, கூடுதல் போலீஸ் கமிஷனர் ராஜேஸ் தாஸிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதன் விபரம்: காதல் தோல்வியால், திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறேன்; எனது தனிப்பட்ட விருப்பத்தில், யாரும் தலையிட முடியாது. அதற்காக, ஆண்களை பற்றி தவறாக நினைப்பது இல்லை. அந்த பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "ஆண்களை செக்ஸ்க்கு பயன்படுத்திக் கொண்டு, டிஷ்யூ பேப்பர் போல் தூக்கி வீசிவிடுவேன் என, நான் தெரிவிக்கவே இல்லை. சொல்லாத கருத்துக்கு, நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். பேட்டி வெளிவந்த நாளில் இருந்து, அலுவலகம், வீடு என, அத்தனை இடங்களையும் முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால், நான் படப்பிடிப்புக்கு செல்ல முடியவில்லை. வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கிறேன். எனக்கு, அலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். தக்க பாதுகாப்பு கோரி, போலீசில் புகார் கொடுத்துள்ளேன். மிரட்டல் விடுத்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளேன். இவ்வாறு சோனா தெரிவித்தார். நடிகை சோனா கொடுத்த புகார் மனு, விசாரணைக்காக, தி.நகர் துணை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

சர்வமங்களா மாமி - raajamundhiri,இந்தியா
27 ஜன, 2013 - 21:19 Report Abuse
 சர்வமங்களா மாமி பெண்களுக்கு ஆண்களால் தான் ஆபத்து இருக்க வேண்டும். பெண்களால் நீ சொல்லும் ஆபத்து இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அதன் அர்த்தமே விபரீதமாகிவிடும். என்னசெய்வது. நாய்வேஷம் போட்டாகி விட்டது. குறைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
Rate this:
மொக்கையன் - chennai ,இந்தியா
22 நவ, 2012 - 18:46 Report Abuse
 மொக்கையன் ஆண்களால ஆபத்தா ! அபத்தமா இருக்கு .....
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
22 நவ, 2012 - 18:17 Report Abuse
 பயில்வான் ஒழுங்கா நடிச்சமா , நாலு காசு சம்பாதிச்சமானு இல்லாம , இது உனக்கு தேவையா ???????
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in