அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்ட கையோடு, வெள்ளித் திரைக்கு அடி எடுத்து வைத்தார், பார்வதி ஓமனக் குட்டன். இந்தியில் ஓரிரு படங்களில் நடித்தார். ஆனாலும், பாலிவுட்காரர்கள், பார்வதியை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, அஜீத்துடன் "பில்லா-2 படத்தில், ஹீரோயினாக நடித்தார். "பில்லாவுக்கு பின், தமிழில் முன்னணி நடிகையாகி விடலாம் என, பார்வதி நினைத்தபோதும், அவரது ஆசை நிறைவேறவில்லை. கோலிவுட்டும் அவரை கைவிட்டு விட்டதால், கையை பிசைந்து கொண்டிருந்த பார்வதிக்கு, தற்போது, அவரது தாய்மொழியான மலையாள திரையுலகம் தஞ்சம் அளித்துள்ளது. மலையாள திரைப்படங்களில், வில்லனாக நடித்து பிரபலமான, பைஜு மேனன் இயக்கும் படத்தில், ஹீரோயினாக நடிக்கிறார், பார்வதி. இந்த படத்துக்கு, "கே.க்யூ என, வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளனர். பார்வதிக்கு, தாய்மொழியில் வரவேற்பு கிடைக்குமா என்பது, "கே.க்யூ வெளிவந்தால் தான் தெரியும்.