‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மலையாளத்தில் 2014ல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, வசூலை வாரிக்குவித்து, சீன மொழி உட்பட 6 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது த்ரிஷியம். மோகன்லால், மீனா நடித்திருந்தனர். தமிழில் கமல், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் வெளியானது.
ஆறாண்டுகளுக்கு பிறகு த்ரிஷியம் 2 உருவாகி கடந்த வாரம் அமேசான் பிரைம் ஓ.டி.டி., தளத்தில் வெளியாகி உள்ளது. உலகில் 225 நாடுகளில் உள்ள மலையாளிகள் இந்த திரைப்படத்தை ஒரே நேரத்தில் பார்த்துள்ளனர். முதல் படத்தை விட அதன் இரண்டாம் பாகம் இன்னும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு வாரத்தில் அதிகமான தமிழ் ரசிகர்களும் த்ரிஷியம் 2 பார்த்துள்ளனர். இரண்டாம் பாகமும் அதற்குள் தெலுங்கில் தயாராக பணிகள் துவங்கி விட்டன.இப்படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் அளித்த பேட்டி...
* த்ரிஷியம் படம் தயாராகும் போதே 2ம் பாகம் உருவாக்கும் என்ற எண்ணம் இருந்ததா
நிச்சயமாக இல்லை. அதோடு கதை நிறைவு பெற்றுவிட்டதாகவே நினைத்திருந்தேன். ஆனால் 2ம் பாகம் தயார் செய்ய கதையில் வாய்ப்புள்ளதா என தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூர் கேட்டுக் கொண்டார். அதற்குள் சமூக ஊடகங்களில் எல்லாம் 2ம் பாக கதை இது தான் என்று வெளியிட்டுக் கொண்டிருந்தனர். சரி, நாமே சிந்திப்போம் என்று கதையை உருவாக்க துவங்கினேன். ஆறாண்டுகள் பல மாற்றங்களுடன் கதை மனதில் ஓடியது. கடைசியில் கொரோனா காலத்தில் ஒரே மாத்தில் ஸ்கிரிப்ட் எழுதி, படப்பிடிப்பும் முடித்து விட்டேன்.
*ஜோர்ஜ் குட்டி (மோகன்லால்) போலீஸ் ஸ்டேஷனில் நிற்பதை பார்த்த ஒரு சாட்சியை 2ம் பாகத்தில் உருவாக்கியிருக்கிறீர்கள். முதல் பாகம் எழுதும் போது அப்படி ஒரு கற்பனை இருந்ததா?
இல்லை. இரண்டாம் பாகம் துவங்க இந்த கற்பனை தான் காரணமாயிற்று.
விருப்பம் உள்ளது. வாய்ப்பு வரட்டும். மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ராம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் வெளியாகும். அது ஒரு மாஸ் படமாக இருக்கும்.