ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருமண வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருப்பதால் சினிமாவுக்கு சில மாதங்கள் விலகி இருக்க முடிவு செய்துள்ளேன், என்று நடிகை இஷா தியோல் கூறியுள்ளார். நடிகை ஹேமமாலினியின் மகள் இஷா தியோலுக்கு, பரத் தக்தானி என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டுள்ள இஷா தியோல், தனது கணவருடன் ஒரு நகைக்கடை விளம்பரத்துக்காக பெங்களூரூ வந்தார்கள். அப்போது இஷா தியோல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், இப்போது நான் எந்த புதிய பட வாய்ப்பையும் ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருக்கிறது. திருமண வாழ்க்கையை நான் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும். அதற்கு சில மாதங்கள் நான் ஓய்வாக இருக்க வேண்டும். நானாகத்தான் சினிமாவை விட்டு விலகியிருக்கிறேன். ஏதாவது நல்ல கதாபாத்திரங்கள் வந்தால், பார்க்கலாம். நடிப்பு என் ரத்தத்தில் ஊறியிருக்கிறது, என்றார்.