அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
வீரசேகரன், சிந்து சமவெளி, மைனா படங்களில் நடித்து வந்தநேரம், மீடியாக்களைத்தேடி அமலாபால் ஓடிக்கொண்டிருந்தார். ஆனால் இப்போதோ, யாராவது மீடியாக்காரர்கள் வருகிறார்கள் என்றால் ஓடி ஒளிகிறார். ஏன் என்ன காரணம்? என்று அவரைக்கேட்டால், என்னை சந்திப்பவர்கள் ஒருவர்கூட நான் என்னென்ன படங்களில், எந்த மாதிரி கேரக்டர்களில் நடிக்கிறேன் என்று கேட்பதில்லை. வந்த வேகத்தில டைரக்டர் விஜய்யை நான் காதலிப்பதாக சொல்லி, அந்த காதல் எப்போது கல்யாணத்தில் முடியப்போகிறது என்றுதான் கேட்கிறார்கள். தெய்வத்திருமகள் என்ற ஒரு படத்தில்தான் அவருடன் நடித்தேன். அதன்பிறகு இப்போது விஜய் சாரை அவர் இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறேன். இதற்கிடையே ஓரிரு முறைதான் நாங்கள் சந்தித்திருக்கிறோம். ஆனால் நாங்கள் ரகசியமாக காதலிப்பதாக செய்தி எழுதுகிறார்கள். இப்போது கல்யாணம் வரை வந்து விட்டார்கள்.
டைரக்டர் விஜய்யுடன் நான் கொண்ட நட்பை இப்படி காதல் கீதல் என்று கொச்சைப்படுத்துவது மனதுக்கு ரொம்ப வேதனையாக உள்ளது. அதனால்தான் சமீபகாலமாக மீடியாக்களை சந்திக்க பிடிக்கவில்லை. விழாக்களுக்கு செல்லும இடங்களில்கூட யாராவது மீடியாக்காரர்கள் வந்திருந்தால், ஓடி ஒளியும் மனநிலையில் இருக்கிறேன் என்கிறார் அமலாபால்.