பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வீரசேகரன், சிந்து சமவெளி, மைனா படங்களில் நடித்து வந்தநேரம், மீடியாக்களைத்தேடி அமலாபால் ஓடிக்கொண்டிருந்தார். ஆனால் இப்போதோ, யாராவது மீடியாக்காரர்கள் வருகிறார்கள் என்றால் ஓடி ஒளிகிறார். ஏன் என்ன காரணம்? என்று அவரைக்கேட்டால், என்னை சந்திப்பவர்கள் ஒருவர்கூட நான் என்னென்ன படங்களில், எந்த மாதிரி கேரக்டர்களில் நடிக்கிறேன் என்று கேட்பதில்லை. வந்த வேகத்தில டைரக்டர் விஜய்யை நான் காதலிப்பதாக சொல்லி, அந்த காதல் எப்போது கல்யாணத்தில் முடியப்போகிறது என்றுதான் கேட்கிறார்கள். தெய்வத்திருமகள் என்ற ஒரு படத்தில்தான் அவருடன் நடித்தேன். அதன்பிறகு இப்போது விஜய் சாரை அவர் இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறேன். இதற்கிடையே ஓரிரு முறைதான் நாங்கள் சந்தித்திருக்கிறோம். ஆனால் நாங்கள் ரகசியமாக காதலிப்பதாக செய்தி எழுதுகிறார்கள். இப்போது கல்யாணம் வரை வந்து விட்டார்கள்.
டைரக்டர் விஜய்யுடன் நான் கொண்ட நட்பை இப்படி காதல் கீதல் என்று கொச்சைப்படுத்துவது மனதுக்கு ரொம்ப வேதனையாக உள்ளது. அதனால்தான் சமீபகாலமாக மீடியாக்களை சந்திக்க பிடிக்கவில்லை. விழாக்களுக்கு செல்லும இடங்களில்கூட யாராவது மீடியாக்காரர்கள் வந்திருந்தால், ஓடி ஒளியும் மனநிலையில் இருக்கிறேன் என்கிறார் அமலாபால்.