சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |
வீரசேகரன், சிந்து சமவெளி, மைனா படங்களில் நடித்து வந்தநேரம், மீடியாக்களைத்தேடி அமலாபால் ஓடிக்கொண்டிருந்தார். ஆனால் இப்போதோ, யாராவது மீடியாக்காரர்கள் வருகிறார்கள் என்றால் ஓடி ஒளிகிறார். ஏன் என்ன காரணம்? என்று அவரைக்கேட்டால், என்னை சந்திப்பவர்கள் ஒருவர்கூட நான் என்னென்ன படங்களில், எந்த மாதிரி கேரக்டர்களில் நடிக்கிறேன் என்று கேட்பதில்லை. வந்த வேகத்தில டைரக்டர் விஜய்யை நான் காதலிப்பதாக சொல்லி, அந்த காதல் எப்போது கல்யாணத்தில் முடியப்போகிறது என்றுதான் கேட்கிறார்கள். தெய்வத்திருமகள் என்ற ஒரு படத்தில்தான் அவருடன் நடித்தேன். அதன்பிறகு இப்போது விஜய் சாரை அவர் இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறேன். இதற்கிடையே ஓரிரு முறைதான் நாங்கள் சந்தித்திருக்கிறோம். ஆனால் நாங்கள் ரகசியமாக காதலிப்பதாக செய்தி எழுதுகிறார்கள். இப்போது கல்யாணம் வரை வந்து விட்டார்கள்.
டைரக்டர் விஜய்யுடன் நான் கொண்ட நட்பை இப்படி காதல் கீதல் என்று கொச்சைப்படுத்துவது மனதுக்கு ரொம்ப வேதனையாக உள்ளது. அதனால்தான் சமீபகாலமாக மீடியாக்களை சந்திக்க பிடிக்கவில்லை. விழாக்களுக்கு செல்லும இடங்களில்கூட யாராவது மீடியாக்காரர்கள் வந்திருந்தால், ஓடி ஒளியும் மனநிலையில் இருக்கிறேன் என்கிறார் அமலாபால்.