பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட அவர் நடித்த இரண்டு படங்கள் ஓடிடியில் ரிலீஸாகிவிட்டது. கடந்த மாதம் தெலுங்கில் ரவிதேஜா, ஸ்ருதிஹாசன் ஆகியோருடன் வரலட்சுமி இணைந்து நடித்திருந்த 'க்ராக்' என்கிற படம் சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப்படத்தில் 'ஜெயம்மா' என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி.
இந்தநிலையில் கடந்த வாரம் தெலுங்கில் அவர் நடித்த மற்றொரு படமான 'நாந்தி' வெளியானது. அல்லரி நரேஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வரலட்சுமி. இந்தப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தவகையில் தெலுங்கில் தான் நடித்த படங்கள் அடுத்ததடுத்து வெற்றியடைந்து வருவதால் அதற்கு காரணமான தெலுங்கு ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் வரலட்சுமி.