ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசுகள் களம் இறங்குகிறார்கள். ஆனால், ஒரு சிலர் தான் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரே குடும்பத்திலிருந்து இரண்டு வாரிசுகள் தமிழ் சினிமாவில் ஹீரோக்களாக முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது ஆச்சரியம் தான். நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா, இளைய மகன் கார்த்தி இருவரும் தான் அந்த வாரிசுகள்.
2007ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான 'பருத்தி வீரன்' படம் வெளிவந்தது. முதல் படத்திலேயே கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடித்து தனி முத்திரை பதித்தார் கார்த்தி. ஆனால், அவருடைய இரண்டாவது படம் வெளிவர ஏறக்குறைய மூன்று வருடங்களாகிவிட்டது.
“ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, மெட்ராஸ், கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி” என இதுவரையில் தான் நடித்த 19 தமிழ்படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சினிமாவில் அறிமுகமான 14 வருடங்களில் 19 படங்களில் தான் நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியமானதுதான். அவர் நடித்து முடித்துள்ள 'சுல்தான்' படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் நாயகர்களில் ஒருவராக நடித்து வருகிறார்.