மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
நடிகை ராதிகா நடித்த சித்தி தொடர் சின்னத்திரை வரலாற்றில் மிக முக்கியமான தொடராகும். மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற முதல் சிரியல். அதன்பிறகு அண்ணாமலை, அரசி, வாணி ராணி, செல்லமே, தாமரை, செல்வி என வரிசையாக ராதிகா நடித்த அத்தனை சீரியல்களும் ஹிட்டானது. அவர் நடித்த சந்திரகுமாரி என்ற சரித்திர தொடர் மட்டும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் தான் அவர் சித்தி சீரியலின் 2ம் பாகத்தை துவக்கினார். அதுவும் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது ராதிகா அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கி விட்டார். அவரது கணவர் நடத்தும் சமத்துவ மக்கள் கட்சியின் பெண்கள் பிரிவின் தலைவியாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார். வருகிற சட்டசபை தேர்தலிலும் போட்டியிட இருக்கிறார்.
இதனால் சித்தி 2 தொடரில் இருந்து அதிகாரபூர்வமாக விலகி விட்டார். ஏற்கெனவே ராதிகா நடித்து முடித்துள்ள எபிசோட்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் ராதிகா நடித்த கேரக்டரில் அடுத்து நடிக்க இருப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ராதிகா சில நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். சேனல் தரப்பு சில நடிகைகளை குறிப்பிடுகிறது. இதனால் இதுவரை அடுத்த சித்தி பற்றி எந்த முடிவும் ஏற்படவில்லை.
ரம்யா கிருஷ்ணன், மீனா, தேவயானி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் இதுபற்றி விவரங்கள் வெளிவரும் என்று தெரிகிறது.