ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை ராதிகா நடித்த சித்தி தொடர் சின்னத்திரை வரலாற்றில் மிக முக்கியமான தொடராகும். மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற முதல் சிரியல். அதன்பிறகு அண்ணாமலை, அரசி, வாணி ராணி, செல்லமே, தாமரை, செல்வி என வரிசையாக ராதிகா நடித்த அத்தனை சீரியல்களும் ஹிட்டானது. அவர் நடித்த சந்திரகுமாரி என்ற சரித்திர தொடர் மட்டும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் தான் அவர் சித்தி சீரியலின் 2ம் பாகத்தை துவக்கினார். அதுவும் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது ராதிகா அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கி விட்டார். அவரது கணவர் நடத்தும் சமத்துவ மக்கள் கட்சியின் பெண்கள் பிரிவின் தலைவியாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார். வருகிற சட்டசபை தேர்தலிலும் போட்டியிட இருக்கிறார்.
இதனால் சித்தி 2 தொடரில் இருந்து அதிகாரபூர்வமாக விலகி விட்டார். ஏற்கெனவே ராதிகா நடித்து முடித்துள்ள எபிசோட்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் ராதிகா நடித்த கேரக்டரில் அடுத்து நடிக்க இருப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ராதிகா சில நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். சேனல் தரப்பு சில நடிகைகளை குறிப்பிடுகிறது. இதனால் இதுவரை அடுத்த சித்தி பற்றி எந்த முடிவும் ஏற்படவில்லை.
ரம்யா கிருஷ்ணன், மீனா, தேவயானி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் இதுபற்றி விவரங்கள் வெளிவரும் என்று தெரிகிறது.