டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகை த்ரிஷா, சென்னையிலேயே பிறந்து, வளர்ந்தவர் என்றாலும், தமிழில் சரளமாக பேசுவதற்கு தடுமாறுவார். இதனால், படங்களில் சொந்த குரலில் பேசுவதற்கு, அவர் ஆர்வம் காட்டுவது இல்லை. பெரும்பாலான படங்களில், இவருக்கு "டப்பிங் குரல் தான். மணிரத்னம் கேட்டுக் கொண்டதால், "ஆயுத எழுத்து படத்தில், சொந்த குரலில் பேசினார். இதற்கு பின், கமல், ரவிகுமார் ஆகியோரின் வற்புறுத்தலால், "மன்மதன் அம்பு படத்திலும், லேட்டஸ்ட்டாக, "மங்காத்தாவிலும், சொந்த குரலில் பேசினார். நீண்ட இடைவெளிக்கு பின், தற்போது, "சமர் படத்தில், சொந்த குரலில் பேசவுள்ளாராம், த்ரிஷா. இந்த படத்தின் ஹீரோ, விஷால். "உடனடி வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும், விஷாலுக்கும், த்ரிஷாவுக்கும், இந்த படம், ஒரு திருப்புமுனையாக அமையும் என்கின்றனர் படக் குழுவினர்.