‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஆண்கள் டிஷ்யூ பேப்பர் மாதிரி என்று வார இதழ் ஒன்றுக்கு பேட்டிகொடுத்து சர்ச்சையில் சிக்கிய சோனா வீட்டை, ஆண்கள் சங்கம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சோனார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மங்காத்தா பார்ட்டியின் போது, பாடகர் எஸ்.பி.பி.சரண் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று போலீஸ், கோர்ட் வரை சென்றார். அந்த சம்பவத்திற்கு பிறகு சற்று விரக்தியாக இருந்த சோனா சமீபத்தில் வாரஇதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், என் வாழ்க்கையில் ஆண்களே வேண்டாம். ஆண்கள் டிஷ்யூ பேப்பர் மாதிரி என்று கூறியதாக செய்திகள் வெளியானது. சோனாவின் இந்த பேச்சுக்கு ஆண்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தான் அப்படி கூறவே இல்லை என்றும், ஆண்களை பற்றி கேவலமாக பேசவில்லை என்றும், தனது பேட்டியை திரித்து கூறிவிட்டதாக சோனா குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் தேனாம்பேட்டையில் உள்ள சோனா வீட்டை ஆண்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது வீட்டுக்கு முன்பாக சுமார் 100பேர் கூடி சோனாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். ஆனால் இந்த போராட்டத்தின் போது சோனா வீட்டில் இல்லை. இதையடுத்து சம்பவத்தை கேள்விப்பட்ட போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதனால் சோனா வீட்டு பகுதியில் சிறிது நேரம் பதற்றமும், போக்குவரத்து பாதிப்பும் நிலவியது.