தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
‛ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும்' என நடிகர் அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் அஜித் அறிக்கை:
என் மீதும், படங்கள் மீதும் அபரிதமான அன்பு கொண்டு எதையும் எதிர்பாராமல் அன்பு செலுத்தும் ரசிகர்களே, கடந்த சில நாட்களாக, வலிமை படத்தின் தகவல் கேட்டு, அரசியல், விளையாட்டு என பல்வேறு இடங்களில் சிலர் செய்யும் செயல் வருத்தப்பட வைக்கிறது.
முன்பே அறிவித்தபடி வலிமை படத்தின் செய்திகள், உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையாக காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில்.
நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூகநலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.
இதை மனதில் கொண்டு ரசிகர்கள், பொது வெளியிலும் சமூகவலைதளத்திலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும், கடைபிடிக்க வேண்டும். என் மேல் உண்மையான அன்புகொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவர் என நம்புகிறேன்.
இவ்வாறு அஜித் கூறியுள்ளார்