இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பல்வேறு நலத்திட்ட பணிகள் மற்றும் அரசியல் பயணமாக சென்னை வந்தார் பிரதமர் மோடி. சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசினார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகம் வரப்போகிறார் என்றதுமே நேற்றே சோசியல் மீடியாவில் கோபேக் மோடி என்ற ஹேஷ்டாக்கை பலர் டிரெண்ட் செய்தனர். நடிகை ஓவியாவும் கோபேக் மோடி என டுவீட் செய்திருந்தார். இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டனர்.
இந்தநிலையில், பாஜகவைச் சேர்ந்தவரான நடிகை காயத்ரி ரகுராம், ஓவியாவின் அந்த பதிவுக்கு தனது டுவிட்டரில் ஒரு பதில் கொடுத்துள்ளார். அதில், வாயை மூடிட்டு போடி என்பது சரியாக இருக்கும். உன்னை அவமதிக்க எதுவுமில்லை. நான் உனக்கு எப்போதுமே எதிரானவள் தான். நான் சரியானதையே தேர்வு செய்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம். மேலும் இது திமுக.,வின் திசை திருப்பும் வேலை. உதயநிதி, ஸ்டாலினை நான் கடுமையாக விமர்சித்து வருவதால் திமுக இதை செய்துள்ளது. மேலும் ஓவியாவை அவர்கள் விலைக்கு வாங்கி உள்ளனர் என குற்றம் சாட்டி உள்ளார்.
பிக்பாஸ் முதல் சீசனிலேயே ஓவியாவிற்கும், காயத்ரிக்கும் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.