திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
"அழகி"யில் தொடங்கி இந்த தீபாவளிக்கு வெளிவந்த "அம்மாவின் கைப்பேசி" வரைக்கும்... மனித உறவுகளும், மனதின் உணர்வுகளும் கச்சிதமாக கலந்த படங்களை இயக்கி, நம்ம இதயம் தொட்டவர் இயக்குநர் தங்கர்பச்சான். ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர், நாவலாசிரியர் என பாராட்டுதலுக்குரிய பன்முகக் கலைஞன். "அம்மாவின் கைப்பேசி" பற்றியும், அவரது மன குமுறல்கள் பற்றியும் இங்கே விவரிக்கிறார்...!
* "அம்மாவின் கைப்பேசி" உருவாகக் காரணம்...?
மனிதனுக்காக கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் சாதனங்கள் மனிதர்களையே ஆக்கிரமிச்சிருக்கற காலம் இது. அதுலேயும், கைப்பேசி வந்ததுக்கு அப்புறம் உறவுகளோட முகங்களை மறந்துட்டு, குரல்களோட தான் வாழ்க்கை நடத்திட்டு இருக்கோம். இந்த நிலை எனக்குள்ள ஏற்படுத்தின பாதிப்புதான் இந்தபடம்.
* படக்கதையில் உங்கள் சொந்த அனுபவங்கள்...?
15 வயசுல சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்தவன் நான். ஒன்பதாவது புள்ளையா இருந்தாலும், என்னை உசுரா வளர்த்த எங்கம்மாவை பிரிஞ்சு வந்ததுக்கு அப்புறம்... அவங்க குரலோட உறவாடித்தான் பாசத்தை பரிமாறிக்கிட்டேன். அந்த வருத்தம்தான் அம்மாவின் கைபேசிங்கற நாவலை எழுத வைச்சு, அதையே படமாகவும் எடுக்க வைச்சிருக்கு.
* "அம்மாவின் கைபேசி" நடிகர்கள் பற்றி...?
இவருக்குள்ள இவ்ளோ திறமையா...?ன்னு வியக்க வைச்சார் சாந்தனு. அடுத்த படத்துலயும் நிச்சயம் பயன்படுத்திக்கணும்னு நினைக்க வைச்சாங்க இனியாவும், மீனாளும். அம்மா பாத்திரத்துக்கு அற்புதமா உயிர் கொடுத்தாங்க ரேவதி. நம்ம நாட்டுல நிறைய திறமையான நடிகர்கள் இருக்காங்க. நாமதான் போர்வாளை வைச்சு அக்குள் மழிச்சுட்டு இருக்கோம்.
* "அழகி" அளவிற்கு உங்களின் மற்ற படங்கள் பேசப்படவில்லையே...?
எல்லோருக்குள்ளேயும் ஒரு காதல் தோல்வி இருந்ததுதான் "அழகி"யின் வெற்றிக்கு காரணம். அழகில இருந்ததை விட அற்புதமான கருத்துக்கள் என்னோட மத்த படங்கள்ல இருந்தாலும், காதல்ங்கற ஒற்றை விஷயம் அழகியை காவியம் ஆக்கிடுச்சு.
* தமிழ் சினிமாவின் தரம் உயர...?
நல்ல படங்களை கொடுக்க படைப்பாளி தயாராத்தான் இருக்கான். ஆனா... இந்த ரசிகர்கள் தான் சினிமாவை பொழுதுபோக்கா மட்டுமே பார்த்து பழகிட்டாங்க! தனக்கு என்ன தேவை?ங்கறதை ரசிகன் உணராத அளவுக்கு, அரசியல் உலகமும், வியாபார உலகமும் அவனை திசை திருப்பிக்கிட்டு இருக்கு. இதனாலதான் மசாலா நெடி இல்லாம, மண் மணத்தோட, மனித உணர்வுகளோட வர்ற படங்களுக்கு முழுமையான வெற்றியை கொடுக்கத் தவறிடுறாங்க. ஆனாலும்... இந்த நிலை மாறும்ங்கற நம்பிக்கை எனக்கிருக்கு!
* களவாடிய பொழுதுகள்...?
அதிகப்படியான உழைப்பை கொட்டி நான் இயக்கின படம். சந்தர்ப்ப சூழ்நிலைகளால வெளிவராம முடங்கிக் கிடக்குது. ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்துறதுக்காக, தகுந்த நேரத்தை எதிர்பார்த்து களவாடிய பொழுதுகள் காத்திருக்குன்னு நினைக்கிறேன். அந்தப்படம் மட்டும் வெளிவந்தா, நிச்சயம் அழகியை விட அதிகமா கொண்டாடப்படும்.