'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பல நடிகர்-நடிகைகளின் கனவு இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். பல முன்னணி கலைஞர்களுக்கே அவரது இயக்கத்தில் நடிப்பதற்கு ஒரு சான்ஸ் கிடைக்காதபோது, கார்த்திக்கின் மகன் கெளதம், ராதாவின் மகள் துளசி ஆகிய இருவருக்கும் கடல் படத்தின் மூலம் அந்த வாய்ப்பு எளிதாக கிடைத்து விட்டது. இருவருமே மோதிரக்கையினால் குட்டுபட்டிருப்பதால் அவர்கள் மீது திரையுலகினர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி ராதாவின் மகளான துளசி கூறும்போது, எங்க அம்மாவை அலைகள் ஓய்வதில்லை படத்தில் பாரதிராஜா சார் அறிமுகம் செய்தார். இப்போது என்னை இன்னொரு ஜாம்பவான் டைரக்டரான மணிரத்னம் சார் அறிமுகம் செய்திருக்கிறார். ஆக எனது அம்மாவை போன்று நானும் கொடுத்து வைத்தவள். கடல் படத்திற்கு என்னை செலக்ட் செய்தபோது மணிரத்னம் பெரிய டைரக்டர் என்பதால் அவருடன் ஸ்பாட்டில் எப்படி வேலை செய்யப்போகிறோம் என்று பயந்து கொண்டிருந்தேன். ஆனால் அவரோ, ரொம்ப பொறுமைசாலி. நடிப்பே தெரியாத எனக்கு ஒவ்வொரு காட்சிகளையும் பக்குவமாக சொல்லித்தந்தார். டயலாக்குகளை எப்படி எப்படி ஏற்ற இறக்கத்துடன் பேச வேண்டும் என்று மென்மையாக சொல்லித்தந்தார். அதனால் பெரிய டைரக்டர்களெல்லாம் கோபத்தில் அடித்து விடுவார்கள் என்று கேள்விப்பட்டிருந்த எனக்கு அது ஆச்சர்யத்தை அளித்தது. இப்படியொரு டைரக்டர் படத்தில் நான் அறிமுகமானது ரொம்ப பெருமையாக இருக்கிறது என்கிறார் துளசி.