கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
பல நடிகர்-நடிகைகளின் கனவு இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். பல முன்னணி கலைஞர்களுக்கே அவரது இயக்கத்தில் நடிப்பதற்கு ஒரு சான்ஸ் கிடைக்காதபோது, கார்த்திக்கின் மகன் கெளதம், ராதாவின் மகள் துளசி ஆகிய இருவருக்கும் கடல் படத்தின் மூலம் அந்த வாய்ப்பு எளிதாக கிடைத்து விட்டது. இருவருமே மோதிரக்கையினால் குட்டுபட்டிருப்பதால் அவர்கள் மீது திரையுலகினர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி ராதாவின் மகளான துளசி கூறும்போது, எங்க அம்மாவை அலைகள் ஓய்வதில்லை படத்தில் பாரதிராஜா சார் அறிமுகம் செய்தார். இப்போது என்னை இன்னொரு ஜாம்பவான் டைரக்டரான மணிரத்னம் சார் அறிமுகம் செய்திருக்கிறார். ஆக எனது அம்மாவை போன்று நானும் கொடுத்து வைத்தவள். கடல் படத்திற்கு என்னை செலக்ட் செய்தபோது மணிரத்னம் பெரிய டைரக்டர் என்பதால் அவருடன் ஸ்பாட்டில் எப்படி வேலை செய்யப்போகிறோம் என்று பயந்து கொண்டிருந்தேன். ஆனால் அவரோ, ரொம்ப பொறுமைசாலி. நடிப்பே தெரியாத எனக்கு ஒவ்வொரு காட்சிகளையும் பக்குவமாக சொல்லித்தந்தார். டயலாக்குகளை எப்படி எப்படி ஏற்ற இறக்கத்துடன் பேச வேண்டும் என்று மென்மையாக சொல்லித்தந்தார். அதனால் பெரிய டைரக்டர்களெல்லாம் கோபத்தில் அடித்து விடுவார்கள் என்று கேள்விப்பட்டிருந்த எனக்கு அது ஆச்சர்யத்தை அளித்தது. இப்படியொரு டைரக்டர் படத்தில் நான் அறிமுகமானது ரொம்ப பெருமையாக இருக்கிறது என்கிறார் துளசி.