நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
சென்னை: ஓ.டி.டி.யில் படம் வெளியிடுவதை கண்டித்து மீண்டும் தியேட்டர்களை மூடுவோம் என உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனாவால் மூடப்பட்ட தியேட்டர்கள் தற்போது 100 சதவீத அனுமதியுடன் இயங்க தயாராகி வருகின்றன. பெரிய நடிகர்களின் புதுப்படங்கள் தியேட்டரில் வெளியாக காத்திருக்கின்றன.இந்நிலையில்மூன்று வாரங்கள் மட்டுமே தியேட்டரில் படம் திரையிடப்படுகிறது. அதற்கடுத்து ஆன்லைனில் வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் விரும்பத் துவங்கியுள்ளனர். மாஸ்டர் படம் வெளியாகிய 15 நாட்களுக்குள் ஆன்லைனில் வெளியிட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே தெலுங்கானாவில் தியேட்டர் அதிபர்கள் புது கோரிக்கை வைத்துள்ளனர். பெரிய பட்ஜெட் படம் என்றால் தியேட்டரில் வெளியாகி ஆறு வாரத்திற்கு பின்னரே ஆன்லைனில் வெளியிட வேண்டும். குறைந்த செலவில் எடுத்த படம் என்றால் நான்கு வாரத்திற்கு பின் தான் ஆன்லைனில் வெளியிட வேண்டும். இல்லையென்றால் மார்ச் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்படும் என எச்சரித்துள்ளனர்.
அதே போன்ற எதிர்ப்பு தமிழகத்திலும் எழ தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் கர்ணன் மற்றும் விஷாலின் சக்ரா உள்ளிட்ட பல படங்கள் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தியேட்டர் உரிமையாளர்கள் கூறியதாவது: சில தயாரிப்பாளர்கள் படம் வெளியாகி குறைந்த நாட்களிலேயே ஆன்லைனிலும் வெளியிட முயற்சிக்கின்றனர். வெளிநாட்டு உரிமையையும் இங்கு படங்கள் வெளியாகும் போதே தருகின்றனர். இதனால் அடுத்த நாளே இணையதளத்தில் படம் வெளியாகும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தியேட்டர் தொழில் தான் பாதிக்கும். இதை தடுக்க தயாரிப்பாளர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் இணைந்து நடவடிக்கை எடுப்பதே நல்லது. இல்லையென்றால் தமிழகத்திலும் தியேட்டர்கள் மூடப்படும் நிலை வரலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.