தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய்யின் துப்பாக்கி படத்தை இந்தியிலும் ரீமேக் செய்யவிருப்பதாக டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார். துப்பாக்கி படத்தில் விஜய்யுடன் இணைந்தது குறித்து முருகதாஸ் அளித்துள்ள பேட்டியில், விஜய்யுடன் நான் சேர்ந்திருப்பது பலருக்கும் ஆச்சரியம். அவருடன் சேர எனக்கு பெரிய திட்டம் எதுவும் இல்லை. ஒரு கதையை பிடிப்போம். இது எந்த ஹீரோவுக்கு செட்டாகும் என பார்ப்போம். அப்படித்தான் என் எல்லா சினிமாக்களும். சினிமாவுக்கு வந்த நாளிலிருந்து விஜய் எனக்கு பழக்கம். நான் உதவி இயக்குநராக இருக்கும் போதே "ஒரு சினிமா பண்ணலாம் கதை ரெடி பண்ணுங்கன்னு சொல்லியிருக்கிறார் விஜய். நானும் கதை தயார் செய்வேன். ஆனால் அடுத்தடுத்த கமிட்மெண்ட்டுகள் எங்களை சேர விடவில்லை. நான் ஒரு படத்தை தொடங்கியிருக்கும் போது, அவர் இன்னொரு படத்தை முடிக்கும் தருவாயில் இருப்பார். நான் தயார் நிலையில் இருந்தால் அவர், "இந்த ஒரு படத்தை முடித்து விட்டு வந்துடுறேன் என்பார். இப்படியே காலம் கடந்து விட்டது. எஸ்.ஏ.சி.சார்தான் எங்களை இணைத்தார். "விஜய்க்கு ஒரு படம் பண்ணனும். எப்போதுமே தயாராக இருக்கோம் என்றார். நானும் "ஏழாம் அறிவு முடித்து விட்டு உடனடியாக விஜய் படத்துக்கான ஒன் லைனை பிடித்து விட்டேன். அதுதான் இந்த "துப்பாக்கி.
மும்பையில் வாழும் ஒரு தமிழ் இளைஞன், ஸ்லீப்பர் செல் எனப்படும் தீவிரவாதத்தையும், அதன் தலைவனையும் அழிக்கும் கதைதான் "துப்பாக்கி. அதை தமிழில் எடுத்தால்தான் நன்றாக இருக்கும். சில மாற்றங்களோடு "துப்பாக்கி இந்திக்கும் ரீமேக் ஆக போகிறது. அக்ஷய்குமார் "எப்போ வேண்டுமானாலும் வாங்கன்னு கால்ஷீட் வைத்து காத்திருக்கிறார். இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு, என்று கூறியிருக்கிறார்.