ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் தியேட்டர்களில் ஜனவரி 13ம் தேதியும், ஓடிடி தளத்தில் ஜனவரி 29ம் தேதியும் வெளியானது.
தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே ஓடிடி தளத்தில் வெளியிட்டதற்கு தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின் நடந்த பேச்சு வார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இருப்பினும் தியேட்டர்களில் 'மாஸ்டர்' படம் இன்னமும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. நேற்றும், நேற்று முன்தினமும் விடுமுறை தினம் என்பதால் பல ஊர்களில் பல தியேட்டர்களில் படத்திற்கு நல்ல கூட்டம் வந்துள்ளது.
சிங்கிள் ஸ்கிரீன்கள் பலவற்றில் இந்த வாரமும் படத்தைத் தொடர முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அடுத்த சில நாட்களில் படத்தை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார்களாம்.
இன்று முதல் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓடிடி தளத்தில் அடுத்த வாரம் வெளியிட்டிருந்தால் இந்த மூன்றாவது வாரத்தில் நல்ல வசூலைப் பெற்றிருக்கலாம் என தியேட்டர்காரர்கள் கருதுகிறார்கள். மூன்றாவது வாரத்தில் தான் தியேட்டர்காரர்களுக்கு பங்குத் தொகை அதிகம் வரும்.
வெளிநாட்டிற்கு படத்தை வாங்கிய வினியோகஸ்தரும், இங்குள்ள சில வினியோகஸ்தர்களும் உண்மையான கணக்கைக் காட்டாத காரணத்தால் தான் தயாரிப்பாளர் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட்டதாகத் தெரிவிக்கிறார்கள். இத்தனைக்கும் வெளிநாட்டு உரிமைக்காக வாங்கிய பணத்தில் பல கோடி ரூபாயை தயாரிப்பாளர் திருப்பிக் கொடுத்து விட்டாராம். உண்மையான வசூலைக் காட்டியிருந்தால் அவர் ஓடிடியில் வெளியிட்டிருக்க மாட்டார் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
விஜய் படத்திற்கே இப்படி ஒரு நிலைமை என்றால் மற்ற படங்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள் என்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.