‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மும்பையைச் சேர்ந்தவரான சதா, ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம் படத்தில் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர். அந்த படத்தில் பக்கா குடும்ப குத்து விளக்காக நடித்தவர், பின்னர் நடித்த அந்நியன் உள்ளிட்ட படங்களில் குத்து நடிகைகள் ரேஞ்சுக்கு துகிலுரிந்து நின்றார். என்றாலும் அடுத்தடுத்து நடித்த படங்கள் வீழ்ந்து விட்டதால் சதாவின் மார்க்கெட்டும் வீழ்ந்தது. அதனால் மீண்டும் மும்பைக்கே திரும்பியவர், அங்கிருந்தபடியே சில இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு கல்லெறிந்து கொண்டிருந்தார். அதன்பயனாக இரண்டொரு படங்கள் கிடைத்தாலும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
அதனால் சதாவை அவரது பெற்றோர் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால், முஸ்லீமான அவரது அப்பா, முஸ்லீம் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மல்லுக்கு நிக்கிறாராம். ஆனால் இந்து மதத்தைச்சேர்ந்தவரான அவரது அம்மா, எனது இந்து மதத்தில் நான் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் சதா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வம்படியாக கோதாவில் குதித்திருக்கிறாராம். ஆக, இந்த கல்யாண கலவரத்தில் தேவையில்லாமல் சிக்கிக்கிடக்கும் சதா, அப்பா-அம்மா இருவரில் யார் பக்கம் சாய்வது என்பது புரியாமல் குழம்பிப்போயிருக்கிறார். இதையறிந்த அவரது நண்பர்கள் வட்டம், இந்துவை மணந்தால் அப்பா கோபிப்பார். முஸ்லீமை மணந்தால் அம்மா கோபிப்பார். அதனால் ஒரு கிறிஸ்தவ மாப்பிள்ளையை மணந்து கொள் என்று சதாவுக்கு ஐடியா கொடுத்திருக்கிறார்களாம். இதையடுத்து இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வு இதுதான் என்று தனக்கு பிடித்தமான கிறிஸ்தவ மாப்பிள்ளையை சீக்ரெட்டாக தேடிக்கொண்டிருக்கிறாராம் சதா.