தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூர்யா நடிக்கும் சிங்கம்-2 படத்தில் நடிப்பதற்கு முதலில் ஹன்சிகாவைதான் புக் பண்ணினர். அதனால் சிங்கம் படத்தில் முதல் பாகத்தில் அனுஷ்கா நடித்தது போல் தனது வேடமும் இருக்கும் என்றுதான் எதிர்பார்த்திருந்தார் ஹன்சிகா. இந்த நிலையில், சிங்கம் படத்தில் நடித்த அனுஷ்காவ செண்டிமென்டுக்காக ஒரு சிறிய வேடத்தில்தான் நடிக்க அழைத்தார் டைரக்டர் ஹரி. ஆனால் அவரோ, சிறிய வேடமென்ன, மீண்டும் கதாநாயகியாகவே நடித்துவிட்டால் போச்சு. செண்டிமென்ட் பெருசா ஒர்க்அவுட் ஆகுமில்ல என்று வலிய வந்து வளைக்குள் விழுந்திருக்கிறார்.
அதுவரையில் அனுஷ்காவைப்பற்றி யோசிக்காத அவரும், படத்தில் ரெண்டு முன்னணி நாயகிகள் இருந்தால் இன்னும் படத்துக்கு பலம்தானே என்று கதையில் இன்னொரு ட்ரேக் போட்டு அனுஷ்காவையும் இழுத்துவிட்டார். அதேசமயம் ஹன்சிகாவுக்காக இருந்த இரண்டு பாடல்களில் ஒன்றை அனுஷ்காவுக்கு திருப்பி விட்டார். கூடவே படத்தில் ஹன்சிகான காட்சிகளிலும் கத்திரி வைத்து விட்டாராம். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் ஹன்சிகா. மான் வேட்டைக்கு வந்து சிங்கத்தின் கோர பிடிக்குள் சிக்கிக்கொண்ட வேடன் மனநிலையில் தவித்துக்கொண்டிருக்கிறார்.